இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடாரில் முன்னிலைப் பெற்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 14, ஜானி பேர்ஸ்டோவ் 28, பிலீப் சால்ட் 17, ஜோ ரூட் 1, மோயீன் அலி 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - சாம் கரண் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட லியாம் லிவிங்ஸ்டோன் 38 ரன்களிலும், சாம் கரண் 35 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 28.1 ஓவர்களில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களைச் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் டுவைன் பிரிட்டோரியர்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணியில் குயிண்டன் டி காக் 5 ரன்னிலும், மாலன், வேண்டர் டூசென், ஐடன் மார்க்ரம் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் அடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 6 ரன்களில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

அதனைத் தொடர்ந்து வந்த வீரர்களாலும் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20. 4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News