கம்பீரைத் தொடர்ந்து அரசியலில் நுழையும் ஹர்பஜன் சிங்!

Updated: Thu, Mar 17 2022 17:34 IST
Image Source: Google

பஞ்சாப்பில் அபார வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. புதிய முதல்வராக பக்வந்த் மான் நேற்று (மார்ச் 16) தனது பொறுப்பேற்றுக்கொண்டார். பஞ்சாப்பில் பெற்ற வெற்றியின் காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது.

இந்தப் பதவிக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் பஞ்சாப் சார்பில் தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஐந்து பேரின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது.

இதனால் இந்த ஐந்து இடங்களுக்கும் பெரும்பான்மை தொகுதிகளை கொண்டுள்ள ஆம் ஆத்மிக்கே கிடைக்கும் நிலை உள்ளது. அதன்படி, ஐந்து எம்.பி.க்களில் ஒருவராக ஹர்பஜன் தேர்வு செய்யப்படுவார் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஏற்கெனவே ஹர்பஜன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இப்போது கூடுதலாக அரசியல் பதவியும் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை