கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு மத்தியில் டிஎன்பிஎல் எனப்பட்டும் தமிழ்நாட்டின் உள்ளூர் டி20 கிரிக்கெட்  தொடரின் 5ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

Advertisement

மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இத்தொடரின் லீக் ஆட்டங்களளே அதிரடிக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது. 

Advertisement

அதிலும் புதுமுக வீரர்கள் பலரும் இத்தொடரின் மூலம் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் நடப்பு சீசனின் ரன் மெஷினாக மாறியுள்ளார் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் 19 வயதேயான சாய் சுதர்சன். 

நடப்பாண்டு சீசனின் முதல் போட்டியிலேயே 87 ரன்களை குவித்து அசத்திய சாய் சுதர்சன், நடப்பு சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 அரைசதங்களை விளாசி அசத்தியுள்ளார். மீதமுள்ள ஒரு போட்டியிலும் 40 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 

நடப்பாண்டு டிஎன்பிஎல் சீசனில் சாய் சுதர்சன் விளையாடிய ஐந்து போட்டிகளில் மொத்தம் 296 ரன்களைச் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 59.2ஆகும். இதனால் சாய் சுதர்சன் நிச்சயம் ஐபிஎல் மற்றும் உள்ளூர் லீக் ஆட்டங்களில் ஜொலித்து இந்திய அணிக்காக நிச்சயம் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News