12 அணிகளுக்கு இடையிலான 9ஆவது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஏற்கெனவே ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யுபி யோதாஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தன்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யோத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்குடன் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது.
அதன்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் . 43 - 28 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் நரேந்தர் 10 புள்ளிகளையும், அஜிங்கியா பவர் 9 புள்ளிகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியால் முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தமிழ் தலைவாஸ் அணி தகுதி பெற்றது.