ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் வெற்றிபெற்று தொடரை வென்றது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஜிம்பாப்வேவை பேட்டிங் செய்ய அழைத்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 

அந்த அணியில் இன்னெசண்ட் கையா 16, மதவெரே 5, கிரேக் எர்வின் 0, டியன் மெயர்ஸ் 3, சகாப்வா 15 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த சிகந்தர் ரஸா - ரியான் பார்ல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் ரஸா 36 ரன்களையும், ரியான் பர்ல் 21 ரன்களையும் சேர்க்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 44.5 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  

அதனைத் தொடர்ந்து வந்த ரஹ்மத் ஷா 17, நஜிபுல்லா ஸத்ரான் 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பி ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி - முகமது நபி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் 37.4 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News