இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே, சஹா, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.

Advertisement

இந்நிலையில் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு ஒரு பேட்டியில் சஹா கூறுகையில், “உங்களிடம் எப்படி சொல்வது எனத் தெரியவில்லை. புதிய விக்கெட் கீப்பரைத் தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் முடிவெடுத்துள்ளார்கள் என்றார் பயிற்சியாளர் டிராவிட். என் வயதா அல்லது உடற்தகுதியா - எது இதற்குக் காரணம் எனக் கேட்டேன். 

Advertisement

இள வயது திறமைகளைத் தேர்வு செய்யவுள்ளார்கள். நீங்கள் 11 வீரர்களில் ஒருவராக இல்லாமல் இருப்பதால் வேறு வீரர்களை முயற்சி செய்கிறோம் என்றார். மேலும், நியூசிலாந்துக்கு எதிராக அரை சதம் எடுத்து அணியைக் காப்பாற்றியபோது பிசிசிஐ தலைவர் கங்குலி எனக்குத் குறுந்தகவல் அனுப்பினார். என்னுடைய ஆட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்த கங்குலி, அவர் பதவியில் இருக்கும் வரை எதைப் பற்றியும் நான் கவலைப்படக்கூடாது என்றார். அது என்னுடைய தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. ஆனால் வெகு சீக்கிரமாக எல்லாமே மாறியது ஏன் எனக்குப் புரியவில்லை” என்று தெரிவித்தார். சஹாவின் இந்தப் பேட்டி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 3ஆவது டி20 ஆட்டத்துக்குப் பிறகு சஹா விவகாரம் பற்றி பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “தனிப்பட்ட உரையாடல்களை வெளியே கூறியதற்காக சஹா மீது எனக்கு வருத்தமில்லை. சஹா இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக அவர் மீது அதிக மரியாதை உள்ளது. அவருடனான மரியாதை காரணமாகவே அந்த உரையாடல் நடைபெற்றது. தெளிவும் உண்மையும் அவருக்கு அளிக்கப்பட வேண்டும். ஊடகம் வழியாக அவர் இதைத் தெரிந்துகொள்ளக் கூடாது.

இதுபோன்ற உரையாடல்களை வீரர்களிடம் நான் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறேன். நான் அவர்களுக்குச் சொல்லும் விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் எண்ணுவதில்லை. இதனால் நான் மனம் வருந்துவதில்லை. இப்படித்தான் இது நடக்கும். 

அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காகத் திரைமறைவில் செய்து உரையாடலே இல்லாமல் இருக்கக் கூடாது. இப்போதும் 11 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்யும்போது நானோ ரோஹித் சர்மாவோ தேர்வு செய்யப்படாத வீரர்களிடம் நிலைமையை விளக்குவோம். என்னுடைய அணியினருக்கு தெளிவும் உண்மையும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News