ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை சென்னை மற்றும் மும்பைக்கு இருக்கும் ரசிகர்கள் மற்ற அணிகளின் ரசிகர்களை விட மிகுந்த உணர்ச்சி மிக்கவர்கள். தங்கள் அணியின் வெற்றியை அதிகமாக கொண்டாடி தீர்ப்பவர்கள்.

Advertisement

மும்பை அணியில் ரோகித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஏரளாமான ரசிகர்கள் இருக்கின்றனர். இதேபோல் மும்பை அணியின் ரசிகர்களை தனது மந்திர பந்துவீச்சால் கட்டி போட்டவர்தான் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா. 2019ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி அணிக்கு வெற்றி தேடி கொடுத்த லசித் மலிங்காவை மும்பை ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.

Advertisement

மும்பை அணி வென்ற 5 ஐபிஎல் கோப்பைகளில் 4 கோப்பைகளை வெல்ல அணியில் முக்கிய பங்காற்றியவர் லசித் மலிங்கா. மும்பை அணியையும், லசித் மலிங்காவையும் பிரிக்க முடியாது என்று கூறும் அளவுக்கு தொடக்க காலத்தில் இருந்து அவர் மும்பை அணிக்காக பங்காற்றியுள்ளார். 

இந்தநிலையில் மும்பை அணியில் விளையாடிய அனுபவம் குறித்து லசித் மலிங்கா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் மும்பை இந்தியன்ஸுடன் விளையாடியபோது, ​​இந்தியாவிலும் உலகெங்கிலும் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.

2008 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனது பெயர் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறித்து எனது மேலாளரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் 2008ஆம் ஆண்டில் நான் உண்மையில் துரதிர்ஷ்டவசமாக இருந்தேன். முதலில் எனக்கு முழங்கால் காயம் ஏற்பட்டது, பிறகு நான் ஐபிஎல் போட்டியை தவறவிட்டேன், இலங்கை அணியின் வருடாந்திர ஒப்பந்தத்தை இழந்தேன். 
அதன்பின் 2009ஆம் ஆண்டில், ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, அனைத்து மருத்துவர்களும் பிசியோக்களும் நான் விளையாட விரும்பினால், டி20 கிரிக்கெட் போன்ற குறுகிய வடிவ போட்டிகளில் விளையாடும்படி என்னிடம் கூறினார்கள்.

ஆனால் எனக்கு இலங்கை அணியில் விளையாட எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை, எனக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது. 2009ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்தது. எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் கிடைத்தது. நான் இதில் பங்கேற்க வேண்டும். எனக்கு இதை விட்டால் வேறு வழியில்லை. 

Advertisement

நான் இதை இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு விளக்கினேன், அவர்கள் எனது நிலைமையை புரிந்து கொண்டனர். அதன்பிறகு தென் ஆப்பிரிக்கா சென்று ஐ.பி.எல்,லில் விலளயாடினேன். எனது வாழ்க்கையே மாறி விட்டது. ஐ.பி.எல் காரணமாக மீண்டும் தேசிய அணியில் இடம் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய நாட்கள் எனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News