இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆறாவது போட்டி நேற்று லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின.

Advertisement

அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 92 ரன்களை குவித்து அசத்தினார். இதன் காரணமாக 292 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிகப்பெரிய இலக்கான இதனை ஆஃப்கானிஸ்தான அணி விரட்டாது என்றே பலரும் நினைத்த வேளையில் 37.1 ஓவரில் 292 ரன்கள் அடித்தால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்கிற கட்டாயத்துடன் களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான அணி துவக்கத்திலிருந்து அதிரடி காண்பித்தது.

Advertisement

ஒரு கட்டத்தில் வெற்றியை நோக்கி அருகில் சென்ற அவர்கள் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 37.4 ஓர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் குவித்து வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினர். ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த அசத்தலான ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது. என்னதான் அவர்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் அவர்களது இந்த முயற்சி அனைவரது மத்தியிலும் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது. 

இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாஹிதி, “இந்த தோல்வி எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இறுதிவரை போராடிய விதம் எங்களுடைய நூறு சதவீத பங்களிப்பையும் வழங்கியதை நினைத்து பெருமை ஆக நினைக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இதில் கிடைத்த பாடத்தின் மூலம் நிச்சயம் உலக கோப்பை தொடரில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்” என கூறியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News