ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 9ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி - ஒடிசா எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதனால் ஆட்டத்தில் 33ஆவது நிமிடத்தில் ஒடிசா எஃப்சி அணியின் நந்த குமார் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். ஆனால் பெங்களூரு அணிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஒடிசா எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் முன்னிலைப் பெற்றது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்து வீணானது. இதனால் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஒடிசா எஃப்சி அணி 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தைப் பிடித்தது.