Advertisement

IND vs ENG : பேர்ஸ்டாவ், ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (

Bharathi Kannan
By Bharathi Kannan March 26, 2021 • 22:24 PM
Advertisement

அதன்பின் ரிஷப் பந்த் வந்தவுடன் ராகுல் தன் சதத்தை நோக்கி சீறிப்பாய்ந்தார். மறுமுனையில்
ரிஷப்பும் இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்க, 28 பந்துகளில் தன் இரண்டாவது ஒருநாள்
அரை சதத்தை அடித்து மிரட்டினார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ராகுலும் ஒருநாள் போட்டிகளில் தனது ஐந்தாவது
சதத்தை கடந்தார். பின், டாம் கரன் பந்தில் டோப்லியிடம் கேட்ச் கொடுத்து 108 (7 பவுண்டரி, 2
சிக்ஸ்) ரன்களில் வெளியேறினார்.

Trending


அதன்பின் களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் ரிஷப் பந்தின் அதிரடிக்கு ஈடுகொடுத்தார். சாம்
கரன் வீசிய 46ஆவது ஓவரில் ஹர்திக் 2 சிக்சரும், பந்த் 1 சிக்சரும் என 21 ரன்களைக் குவித்து
மிரட்ட, இந்திய அணி 300 ரன்களை நோக்கி சீறிப்பாய்ந்தது.

பின் இறுதி ஓவர்களில் ரிஷப் பந்த் 77 (2 பவுண்டரி, 7 சிக்சர்) ரன்களோடும், பாண்டியா 35 (1
பவுண்டரி, 4 சிக்சர்) ரன்களோடும் நடையைக்கட்ட இந்தியா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்
இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் டாம் கரன், டோப்லி தலா 2
விக்கெட்டுகளையும்; ரஷித், சாம் கரன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து 337 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த
அணியின் தொடக்க வீரர்களான ஜேஸன் ராய், பேர்ஸ்டோவ் இணை இந்திய அணியின்
பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். ராய் தொடக்கத்தில் அதிரடியாக ஆட, அவருக்கு
பேர்ஸ்டோவ் ஒத்துழைப்பு கொடுத்தார். பின்னர் பேர்ஸ்டோவும் வான வேடிக்கை காட்டினார்.

ராய் 55 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார். அவர் களத்திற்கு வந்தது
முதலே சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசினார்.

சதம் அடித்த பேர்ஸ்டோவ் 112 பந்துகளில் 124 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 7 சிக்ஸர்,
11 பவுண்டரிகள் விளாசினார். மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட
ஸ்டோக்ஸ் 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில்
ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 337 ரன் எடுத்து 39
பந்துகள் மீதமிருக்க அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.



Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement