இது எங்களுக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் - முனாஃப் படேல்!
நாங்கள் சில தவறுகள் செய்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் எங்களால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என டெல்லி அணி பயிற்சியாளர் முனாஃப் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கிவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்திவுள்ளன.
அதேசமயம் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 63அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முனாஃப் படேல், “இது எங்களுக்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய ஆட்டம் என்பதால் கொஞ்சம் அழுத்தம் இருக்கிறது. ஏனெனில் இப்போட்டியில் தோற்றால், நாங்கள் போட்டியிலிருந்து வெளியேறிவிடுவோம். இந்த தொடரில் நாங்கள் சில தவறுகள் செய்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் எங்களால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அணியில் உள்ள சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது, நாங்கள் இன்னும் மிகவும் நேர்மறையாக இருக்கிறோம். நாங்கள் அடுத்த ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். கேஎல் ராகுல் அசாதாரணமாக பேட்டிங் செய்கிறார், எல்லா நிலைகளிலும் ரன்கள் எடுத்துள்ளார். அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர் தனது கையை உயர்த்துகிறார். மேலும் அணியின் தொடக்கம் சரியாக இல்லாத காரணத்தால் அவர் தொடக்க வீரர்காகா களமிறங்கியதுடன் சதமும் அடித்துள்ளார்.
அதேசமயம் மிட்செல் ஸ்டார்க் எங்கள் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர். ஏனெனில் அவர் மணிக்கு 145 கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார், பந்தை ஸ்விங் செய்கிறார், அதுவும் வான்கடே விக்கெட்டில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இரண்டும் கிடைக்கும் என்பதால் அவர் இல்லாதது எங்களுக்கு பின்னடைவாக இருக்கும். ஆனால் வேறு வழியில்லை என்றால், நீங்கள் வேறு மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டும், உங்களிடம் உள்ளதை வைத்துக்கொண்டு நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும்” என்று கூறிவுள்ளார்.
Also Read: LIVE Cricket Score
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி மற்றும் ஒரு முடிவில்லை என மொத்தமாக 13 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், இப்போட்டியின் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now