இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 132 ரன்களும், இங்கிலாந்து 141 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 285 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து வெற்றிக்கு 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

அதன்படி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 20ஆவது ஓவரில் 69 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து இங்கிலாந்து தடுமாறியது.

Advertisement

இக்கட்டான சூழலில் இணை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 159 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து இருந்தது. அடுத்து வந்த பென் ஃபோக்ஸ் ஜோ ரூட்டிற்குன் உறுதுணையாக விளையாட, இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 120 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்து இங்கிலாந்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.

இறுதியில் ரூட் மற்றும் ஃபோக்ஸ் முறையே 115 மற்றும் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டமிழக்காமல் ரூட் சதம் விளாசி அசத்தியதால் இங்கிலாந்து அணி போட்டியை வென்றது. தற்போது பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அந்த அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

முதல் டெஸ்டின் 4 வது நாளில் ஜோ ரூட் தனது சதத்தை விளாசினார். அந்த வேளையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை பதிவு செய்தார். ரூட் இந்த மைல்கல்லை எட்டியவுடன் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, அவரை எல்லா நேரத்திலும் சிறந்தவர் என்று குறிப்பிட்டு பாராட்டினார். ”இவ்வளவு நெருக்கடியான சூழலிலும் எவ்வளவு அற்புதமாக விளையாடி உள்ளார் ஜோ ரூட். 

 

Advertisement

அவர் எல்லா காலத்திலும் சிறந்தவர்” என்று கங்குலி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். அலெஸ்டர் குக்கிற்கு பிறகு 10,000 டெஸ்ட் ரன்களை பதிவு செய்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் ரூட் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News