விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்கின. இதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதின. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சவுராஷ்டிரா அணி ஷெல்டன் ஜாக்சனின் அதிரடியான சதத்தினால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக ஷெல்டன் ஜாக்சன் 134 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் இமாலய இலக்கை துரத்திய தமிழ்நாடு அணியில் ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும், விஜய் சங்கர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த பாபா அபாரஜித் - இந்திரஜித் சகோதரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சகோதரர்கள் இருவரும் அரைசதம் கடந்தனர். பின் 50 ரன்களில் இந்திரஜித் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபாரஜித் சதம் விளாசினார்.

Advertisement

பின் 122 ரன்களில் அபாரஜித் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 31 ரன்னிலும், ஷாருக் கான் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், அணியை வெற்றிக்கு அருகிலும் அழைத்துச் சென்றார். பின் 70 ரன்களில் வாஷிங்டனும் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனால் கடைசி ஓவரில் தமிழ்நாடு அணி வெற்றிபெற 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கைவசம் 2 விக்கெட்டுகளை மட்டுமே வைத்திருந்தது. இறுதில் தமிழ்நாடு அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றியைப் பெற்றது.

Advertisement

இதன்மூலம் தமிழ்நாடு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தி, விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News