இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது பல்லகலே மைதானத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பத்து வீசுவதாக தீர்மானம் செய்தது. கடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இன்று அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி முடித்துள்ள நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய நட்சத்திர வீரர்கள் போட்டியின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து கைக்கு வந்த எளிதான கேட்ச்களை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஐந்து ஓவர்களுக்கு உள்ளாகவே மூன்று எளிய கேட்ச்களை இந்திய அணி வீரர்கள் தவறவிட்டதால் நேபாள் அணி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஒருவேளை ஆரம்பத்திலேயே கேட்ச்கள் பிடிக்கப்பட்டிருந்தால் நேபாள் அணியை எப்போதோ சுருட்டியிருக்கலாம் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய வீரர்களில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் விராட் கோலி இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 143 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்திருக்கும் வேளையில் அவரே இன்றைய போட்டியில் எளிதான ஒரு கேட்சை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

குறிப்பாக ஆசிப் ஷேக் என்கிற நேபாள் அணியின் துவக்க வீரரின் கேட்சை 1 ரன் இருக்கும் போது விராட் கோலி தவறவிட்டார். அதனை சரியாக பயன்படுத்திய ஆசிப் ஷேக் 58 ரன்கள் குவித்து மறுபடியும் விராட் கோலியிடமே கேட்ச்சாகி வெளியேறினார். இதன்மூலம் பல அணிகள் விளையாடும் தொடர்களில் தனது 100ஆவது கேட்சையும் பிடித்துள்ள விராட் கோலி, முகமது அசாரூதினுக்கு பின் இச்சாதனையை செய்யும் இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News