ரோஹித், விராட் அதிரடியில் ஆஸியை வீழ்த்தி இந்தியா அறுதல் வெற்றி!

Updated: Sat, Oct 25 2025 16:08 IST
Image Source: Google

இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலிரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. 

அதன்படி விளையாடிய அந்த அணிக்கு மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் இணை சிறப்பான தொடக்கத்தை வ்ழங்கினர். இதில் டிராவிஸ் ஹெட் 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்கா, அவரைத் தொடர்ந்து 41 ரன்களைச் சேர்த்த நிலையில் மிட்செல் மார்ஷும் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட்- மேத்யூ ரென்ஷா இணை அணியை சரிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். இதில் ஷார்ட் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்திருந்த மேத்யு ரென்ஷாவும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

மேற்கொண்டு களமிறங்கிய வீரர்களில் அலெக்ஸ் கேரி 24 ரன்களையும், கூப்பர் கணொலி 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 236 ரன்களில் ஆல் அவுட்டும் ஆனது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொத்தனர். இதில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, மறுபக்கம் கேப்டன் ஷுப்மன் கில் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - விராட் கோலி இணி அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தைப் பதிவு செய்தார். 

அதேபோல் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் அரைசதம் கடந்தார். மேலும் இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 121 ரன்களையும், விரட் கோலி 7 பவுண்டரிகளுடன் 74 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 38.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியையும் பதிவு செய்து அசத்தியுள்ளது. 

Also Read: LIVE Cricket Score

இருப்பினும் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதேசமயம் இந்த போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதுடன், தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை