ஐபிஎல் தொடரில் எதிா்வரும் சீசனுக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. 

Advertisement

இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். 

Advertisement

அதேசமயம் டேவிட் வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே போன்ற பிரபல வீரர்களை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது. 

டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெறாதது பற்றி அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி கே. ஷம்மி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இது மிகவும் கடினமான முடிவு. ஆனால் சம்பளத்தை முன்வைத்து ஒரு வீரர் ஏலத்தில் இடம்பெற விருப்பப்படும்போது அந்த முடிவை நாங்கள் மதிக்க வேண்டும். ஏலத்தில் சரியான தொகைக்கு ரஷித் கானைத் தேர்வு செய்ய முயற்சி செய்வோம்” என்று தெரிவித்தார். 

முன்னதாக கடந்த 2017 இல் ரூ. 4 கோடிக்கும், 2018இல் ரூ. 9 கோடிக்கும் ரஷித் கானை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. அந்த அணிக்காக 76 ஆட்டங்களில் விளையாடி 93 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News