Asia cup 2022
ஆசிய கோப்பை 2022: இலங்கையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றம்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகள் என மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்கும்.
இதனிடையே கரோனா பரவல் மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்திருந்தது. 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.