Advertisement
Advertisement
Advertisement

Icc cricket world cup

சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!
Image Source: Google
Advertisement

சஞ்சுவின் இடத்தில் இப்பொழுது யாரும் இருக்க விரும்ப மாட்டார்கள் - ராபின் உத்தப்பா!

By Bharathi Kannan September 20, 2023 • 14:42 PM View: 229

இந்தியாவில் அடுத்து வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது தொடங்கவுள்ளது. பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வைத்தே முதல்முறையாக முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க இருக்கும் பத்து அணிகளும் உலகக் கோப்பைக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளும் விதமாக, பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் உலகக் கோப்பைக்கு இறுதி அணியை அறிவிக்க இந்த மாதம் 28ஆம் தேதி வரை நாள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்குள் நாம் நம்முடைய அணியை இறுதி செய்து கொடுத்தாக வேண்டும். அதன்படி உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் இருவரும் சிறிய காயங்களினால் இருக்கிறார்கள். 

Advertisement

Related Cricket News on Icc cricket world cup