India vs south africa
தோல்விக்கு முட்டாள்தனமான முடிவே காரணம் - ரோஹித்தை சாடும் கம்பீர்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று பெர்த் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் 2ஆவது இடத்திற்கு சென்றது.
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு ஃபீல்டிங் ஒருபுறம் முக்கிய காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் பேட்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக இருந்தது. பெர்த் போன்ற களத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்றால் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் தான் இந்திய அணி விளையாட வேண்டியிருந்தது. அதற்கேற்றார் போல தான் ஸ்பின்னர் அக்ஷர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.