Ravichandran ashwin
தற்போது உலகில் மிகச்சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் தான் - சௌரவ் கங்குலி!
நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியின் மூலமாக 13வது ஒருநாள் கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்குகிறது. நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கு இந்திய அணி மிகச் சிறப்பான முறையில் தயாராகி வந்திருக்கிறது. இந்திய அணிக்கு கடைசி இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கிடைக்காமல் போயிருந்தாலும் கூட, இந்தியா அணிக்கு அதற்கு முன்னால் சிறந்த போட்டிகளும், தற்போது நல்ல ஓய்வும் கிடைத்திருக்கிறது.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி எப்படி செயல்படும்? இந்த உலகக் கோப்பை குறித்து தனக்கு என்ன கருத்து இருக்கிறது? என்பது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மனம் திறந்து ஒரு நீண்ட பேட்டி அளித்திருக்கிறார்.