T20 world cup
தோனியின் அனுபவம் இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் - கவுதம் காம்பீர்
நடப்பாண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் தோனியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்று விட்டனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.