கடந்த சில தினங்களாக இந்தியாவின் ஹாட் டாபிக் விராட் கோலி தான். ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட்கோலி நீக்கப்பட்ட விதம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. 

Advertisement

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் அணியில் விராட் கோலி விலக்கு கேட்டுள்ளார் என்ற தகவல் பரவிய நிலையில், ஒருநாள் தொடரில் ஆடுவதை உறுதி செய்த விராட் கோலி, தன்னை தேர்வாளர்கள் கேப்டன்சியிலிருந்து நீக்கிய விதம், கங்குலியின் கருத்துக்கு முரணான கருத்து ஆகியவற்றை செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்க, கோலி பற்றவைத்த தீ பற்றி எரிகிறது.

Advertisement

இவ்வளவு பரபரப்புக்கு இடையே, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த 16ஆம் தேதி மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச்சென்றது.

அப்போது, பேருந்தில் சென்று விமான நிலையத்தில் இறங்கியதும், விராட் கோலி செய்தியாளர்களிடம் தனது மகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கு பின்னர், அனுஷ்கா ஷர்மா மகள் வாமிகாவுடன் வந்தார். கோலியின் கோரிக்கையை ஏற்று, அவரது மகளை கேமராமேன்கள் புகைப்படம் எடுக்கவில்லை.

இந்நிலையில் தனது மகளை புகைப்படம் எடுக்காமல் இருந்த செய்தியாளர்களுக்கு அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாங்கள் எங்கள் குழந்தைக்கு தனியுரிமையைத் தேடுகிறோம், மேலும் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி அவளது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வாய்ப்பளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். 

Advertisement

அவள் வயதாகிவிட்டதால், அவளது இயக்கத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது, எனவே உங்கள் ஆதரவு தேவை, எனவே தயவுசெய்து இந்த விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். படங்களை இடுகையிடாமல் விட்டுவிட்டதற்காக ரசிகர்களுக்கும், இணைய மக்களுக்கும் நன்றி. இது உங்களின் அன்பின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது”என பதிவிட்டுள்ளார்.

தற்போது அனுஷ்கா சர்மாவின் இப்பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News