ஐபிஎல் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 88 ரன்களைச் சேர்த்தார்.

Advertisement

இலக்கை துரத்திக் களமிறங்கிய சிஎஸ்கே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியைப் பெற்றது. 

இப்போட்டியில் வெற்றிபெற்ற பிறகு பேசிய பஞ்சாப் அணிக் கேப்டன் மயங்க் அகர்வால், “தொடர்ந்து டாஸை ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை. அர்ஷ்தீப்சிங் தொடர்ந்து வியக்கத்தக்க வகையில் பந்துவீசி வருகிறார். கடினமான நேரங்களில் அவரை முழுமையாக நம்பி ஓவர்களை கொடுக்கலாம். 

என்னுடைய நம்பிக்கைக்குரிய பௌலர்கள் இவர்தான். ரபாடா சிறப்பாக பந்துவீசி ருதுராஜ், அம்பத்தி ராயுடு விக்கெட்களை வீழ்த்தியதுதான் வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தது. அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களது ஒரேகுறிகோள்” எனக் கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News