ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது.

Advertisement

புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 26 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு 3 விக்கெட்டும் , அர்ஷ்தீப் சிங்குக்கு 2 விக்கெட்டும் , அவேஷ் கானுக்கு 1 விக்கெட்டும் கிடைத்தன.

Advertisement

பின்னர் ஆடிய இந்திய அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் வெற்றி இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17 பந்தில் 33 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிக்சர் அடித்து ஹர்திக் பாண்ட்யா அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றி மூலம் கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தானை இந்தியா பழிதீர்த்து கொண்டது. ஆல்ரவுண்டு பணியில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “நிலமையை மதிப்பிட்டு நமது திறமையை வெளிப்படுத்துவது முக்கியமானது. என்னை விட பந்து வீச்சாளர் கூடுதலான நெருக்கடியில் இருப்பதாக நான் உணர்ந்தேன். கடைசி ஓவரில் எனக்கு ஒரு சிக்சர் தேவைப்பட்டது. அதற்காக காத்திருந்து அந்த வாய்ப்பையும் பயன்படுத்தி கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில், “எங்களது தொடக்கம் நன்றாக இருந்தது. 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். வேகப்பந்து வீரர்கள் நன்றாக செயல்பட்டனர்.

Advertisement

கடைசி ஓவரை 15 ரன் வரை வைத்திருக்க நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஹர்திக் பாண்டியா அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்” என்று தெரிவித்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News