டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

Advertisement

மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20  ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியில் ஷான் மசூத் மட்டுமே நன்றாக பேட்டிங் ஆடி 38 ரன்கள் அடித்தார். அவரைத்தவிர மற்ற வீரர்கள் யாரும் சரியாக பேட்டிங் ஆடாததால் 20 ஓவரில் வெறும் 137 ரன்கள் மட்டுமே அடித்தது பாகிஸ்தான் அணி.

Advertisement

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19ஆவது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. 

இதற்கு முன் 2010இல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது. இப்போட்டி முடிந்தப் பிறகு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டது. அதற்கு இந்தியாவின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானின் சதாப் கான், தொடர்ந்து வனிந்து ஹசரங்கா, ஷிக்கந்தர் ராசா ஆகியோர் போட்டியில் இருந்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சாம் கரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாபர் அசாமிடம், யாருக்கு தொடர் நாயகன் விருதி கிடைத்திருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாபர் அசாம், ‘‘சதாப் கான் இத்தொடரில் அதிரடியாக செயல்பட்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். நாம் அனைவரும் அதனைப் பார்த்தோம். அவருக்குத்தான் தொடர் நாயகன் விருதினை கொடுத்திருக்க வேண்டும். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தினார். இவருக்குத்தான் தொடர் நாயகன் விருது கிடைத்திருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News