வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டி டிரா ஆன நிலையில், இரண்டாவது போட்டி டாக்காவில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisement

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 25/5 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் முஷ்பிசுர் ரஹீம் 175 (355), லிடன் தாஸ் 141 (246) இருவரும் அபாரமாக செயல்பட்டு அணியை மீட்டனர். இறுதியில் வங்கதேச அணி 365/10 ரன்களை குவித்தது.

Advertisement

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இலங்கை அணியில் ஒசாக ஃபெர்ணான்டோ (57), கருணரத்னே (80), மேத்யூஸ் (145), டி சில்வா (58), சண்டிமல் (124) என களமிறங்கியவர்களில் பெரும்பாலோனர் பெரிய ஸ்கோர் அடித்தார்கள். 

இதன்மூலம் இலங்கை அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 506/10 ரன்களை குவித்து அபார முன்னிலையை பெற்றது. வங்கதேச அணி தரப்பில் ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் 140 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் களமிறங்கியபோது பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற ஆரம்பித்தது. இதனால், முதல் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் லிட்டன் தாஸ் (52), ஷகிப் அல் ஹசன் (58) இருவரும் சேர்ந்து ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், வங்தேச அணி  தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 169/10 ரன்களை மட்டும் சேர்த்து, 29 ரன்களை மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இலங்கை தரப்பில் அபாரமாக பந்துவீசிய அசிதா ஃபெர்னாண்டோ 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

இதையடுத்து எளிய இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரகள் ஒசாக பெர்ணான்டோ 21 (9), கருணரத்னே 7 (9) இருவரும் சேர்ந்து, அணிக்கு மூன்று ஓவர்களில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர். இதனால் இலங்கை அணி (29/0) 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசிதா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாகவும், தொடர் முழுவது சிறப்பாக செயல்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News