ஐபிஎல் 2022: புதிய அணிகள் குறித்து பிசிசிஐ தகவல்!

Updated: Wed, Oct 13 2021 18:24 IST
BCCI Extends Date For 'The Invitation To Tender' For 2 New IPL Teams (Image Source: Google)

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனில் 8 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. 

இந்நிலையில் அடுத்த சீசன் முதல் ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது. 

இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்குக் கூடுதலாக ரூ. 7000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் ஆமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.

இந்நிலையில் ஏல விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 20 வரை நீட்டித்துள்ளது பிசிசிஐ. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் இம்முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை அக்டோபர் 25 அன்று துபாயில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை