இதற்கு காரணம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்து டி 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று அவர் அறிவித்தார். தமது ஓய்வுக்கு காரணம் தொடர்ந்து நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் தான் என்று பென் ஸ்டோக்ஸ் குறிப்பிட்டார்.

Advertisement

தற்போதுள்ள அட்டவணையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது சாத்தியம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார். பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், அவரின் இந்த முடிவுக்கு காரணம் ஐசிசி யின் இந்த அட்டவணை தான் என்று குற்றம் சாட்டி வருகின்றன. 

Advertisement

இது குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், “பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய செய்தி. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் இருப்பதால்தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தொடர்ந்து விளையாடினால் வீரர்களுக்கு பைத்தியம் தான் பிடிக்கும். ஐசிசி உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என தொடர்ந்து போட்டிகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் அவர்களின் லாபத்திற்காக கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகின்றன.

இப்படி அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினால் வீரர்களால் என்னால் முடியாது என்று தான் சொல்லிவிட்டு விலகிவிடுவார்கள். பென் ஸ்டோக்ஸ்க்கு 31 வயது தான் ஆகிறது. அதற்குள் ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இது சரி கிடையாது .இதற்கு காரணமான கிரிக்கெட் அட்டவணையை நாம் சரி செய்ய வேண்டும்.

இப்போது இருக்கும் அட்டவணை ஒரு காமெடியாக தான் தோன்றுகிறது. அனைவருக்கும் டெஸ்ட் போட்டிகள் பிடித்திருக்கிறது. டி20 கிரிக்கெட் போட்டியும் விரும்பி பார்க்கிறார்கள். இப்போது ஒரு நாள் போட்டியின் எதிர்காலம் தான் ஆபத்தில் இருக்கிறது. எனவே ஐசிசி கூர்ந்து நடவடிக்கை எடுத்து அட்டவணையை சரி செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அட்டவணையை ஐசிசி தற்போது தயாரித்துள்ளது. இதில் ஐபிஎல் தொடர் உள்ளிட்ட மற்ற நாடுகள் நடத்தும் தொடர்களுக்கு அட்டவணையில் ஐசிசி இடம் வழங்கியிருக்கிறது. இதனால் கிடைக்கும் நேரத்தில் தான் மற்ற தொடர்களை நடத்த முடியும் என்பதால் அது வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இருந்து வெளியேற நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News