ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பிரெண்டன் டெய்லர். இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். 

Advertisement

இந்நிலையில் இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட கட்டாயப்படுத்தினார் என்று தனது சமூக வலைதள பதிவின் மூலம் பிரெண்டன் டெய்லர் அதிர வைக்கிறார்.

Advertisement

ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு விரிவான பதிவில் பிரெண்டன் டெய்லர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு மிகவும் நீண்டதாக இருக்கிறது.

2019 அக்டோபரில் ஸ்பான்சர்ஷிப் விவரங்கள் மற்றும் ஜிம்பாப்வேயில் டி 20 போட்டியின் சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதிக்க ஒரு தொழிலதிபரால் இந்தியாவுக்குச் செல்ல தான் அழைக்கப்பட்ட விதத்தைப் பற்றி டெய்லர் விரிவாக எழுதியுள்ளார்.

இந்தப்பதிவில் மேட்ச் பிக்ஸிங்காக அவர் அணுகப்பட்டார் என்பதும், இந்தியத் தொழிலதிபருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதும் குற்றச்சாட்டின் சாரம்சமாக அமைந்துள்ளது,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள்  விக்கெட் கீப்பர் பிரெண்டன் டெய்லர்,  இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைத்துள்ளார். தான் அந்த தொழிலதிபரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் சொல்கிறார்.

Advertisement

“நான் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுமையை சுமந்து வருகிறேன், அது என்னை மிகவும் இருண்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றது மற்றும் எனது மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் சமீபத்தில் தான் எனது கதையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன், முதலில் அது வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது” என்று அவர் தெரிவிக்கிறார்.

 

35 வயதான டெய்லர் கடந்த ஆண்டு சர்வதேச ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் இந்தியாவில் தங்கியிருந்த கடைசி நாளில் மேற்கூறிய தொழிலதிபர் மற்றும் அவரது சகாக்களால் இரவு உணவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு விஷயங்கள் வியத்தகு முறையில் மாறியது.

Advertisement

இரவு விருந்தின் போது போதைப்பொருள் எடுக்க தூண்டிவிடப்பட்டதாகவும், அதன் காணொளி எடுக்கப்பட்டதாகவும் டெய்லர் குற்றம் சாட்டினார். தான், புக்கிகளால் அணுகப்பட்டதை ஒப்புக்கொண்ட பிரெண்டன் டெய்லர், இதனால் ஐசிசி அவருக்கு பல ஆண்டு தடை விதிக்கும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News