IRE vs IND: பாண்டியா தலைமையில் விளையாடியது குறித்து சஹால்!

Updated: Mon, Jun 27 2022 21:57 IST
Chahal: Very Difficult To Adapt Cold Condition As A Finger Spinner (Image Source: Google)

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியே வெற்றிகரமாக அமைந்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவேந்திர சாஹல் தான். சிறப்பாக பந்துவீசிய சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். இதனையடுத்து அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் விளையாடியது குறித்து சாஹல் பேசியுள்ளார். அதில், “பவுலர்களுக்கு எந்தளவிற்கு சுதந்திரம் வேண்டுமோ அதனை கொடுக்கிறார். இதனை விட முக்கியமான ஒன்று ஹர்திக் மிகவும் பொருமையாக இருந்தது தான். எனது திட்டத்தை செயல்படுத்த முழு வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

அயர்லாந்து போன்ற குளிர்ச்சியான களங்களில் பந்துவீசுவது மிகவும் கடினம். நான் ஒரு விரல் ஸ்பின்னராக உணர்ந்தேன். சில சமயங்களில் இங்கு பந்துவீசுவது மிகவும் கடினமான ஒன்று. எனினும் அதற்கு நம்மை தயார் படுத்திக்கொண்டு தான் ஆக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி நாளை மாலை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தனது முதல் தொடரிலேயே வெற்றி பெற்றுக்கொடுத்த பெருமை கிடைக்கும். இதனால் அடுத்த போட்டியிலும் யுவேந்திர சாஹலின் பங்கு பெரும் தேவையாக உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை