கரோனா அச்சுறுத்தல்: ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை தொடர்கள் ஒத்திவைப்பு!

Updated: Tue, Jan 04 2022 22:20 IST
COVID-19: BCCI postpones Ranji Trophy, CK Nayudu Trophy, Women's T20 League (Image Source: Google)

இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரதானமானது ரஞ்சி கோப்பை என்றழைக்கப்படும் முதல் தர கிரிக்கெட் தொடர் தான். 

கடந்தாண்டு கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட இத்தொடரின், இந்தாண்டுக்கான சீசன் இம்மாதம் தொடங்க இருந்தது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 

இந்நிலையில் இந்தியாவில் அதிகரித்து வரும் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ரஞ்சி கோப்பை தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அதேபோல் சிகே நாயுடு கோப்பை தொடர், சீனியர் மகளிர் டி20 லீக் உள்ளிட்ட தொடர்களையும் பிசிசிஐ ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதில் சீனியர் மகளிர் டி20 கோப்பை தொடர் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை