ஐபிஎல் 2022: தீபக் சஹாருக்கு பதிலாக அவரை அணியில் எடுங்கள் - ரசிகர்கள் கருத்து!

Updated: Tue, Apr 12 2022 22:35 IST
Image Source: Google

ஐபிஎல் மெகா ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து தீபக் சாஹரை சிஎஸ்கே அணி வாங்கியது. ஆனால் காயம் காரணமாக சிஎஸ்கே அணியில் இன்னும் இணையாமல் உள்ளார். 

தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகியுள்ளது. அதனால் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தீபக் சஹார் விளையாட வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.

அதே ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றும் எந்த அணியும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை எடுக்கவில்லை. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கெஸ்ட் பாக்ஸ் எனப்படும் திரையில் மக்களோடு மக்களாக வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

அதனால் காயத்தால் ஐபிஎல் தொடரிலிருந்து விலக உள்ள தீபக் சாஹருக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை சிஎஸ்கே அணியில் எடுக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்க வேண்டும். 

தீபக் சாஹர் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்து விடுவார் என்பதால், இஷாந்த் சர்மாவை தற்காலிமாக பயன்படுத்தி கொள்ள பிசிசிஐ அனுமதிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை