ஐபிஎல் 2021: கொப்பையை வெல்லும் அணி இது தான் -டேல் ஸ்டெய்ன்!

Updated: Thu, Oct 14 2021 19:29 IST
Image Source: Google

ஐபிஎல் 14ஆவது சீசன் நாளையுடன் முடிகிறது. நாளை துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. இரு அணிகளுமே கோப்பையை வென்ற அணிகள் தான். 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணியும், 2 முறை கோப்பையை வென்ற கேகேஆர் அணியும் இந்த இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

2014ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள கேகேஆர் அணி, ஐபிஎல் இறுதிப்போட்டியில் வைத்திருக்கும் 100 சதவிகித வெற்றி விகித சாதனையை தக்கவைத்துக்கொள்ளும் வகையில், இந்த முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அதேசமயம் கடந்த சீசனில் முதல்முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அதற்கு பதிலடியாக இந்த சீசனில் 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், சிஎஸ்கே - கேகேஆர் அணிகளுக்கு இடையேயான ஃபைனல் குறித்து பேசிய டேல் ஸ்டெய்ன், “நான் நம்பர்களை நம்புபவன். மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் மோசமான ஃபார்ம், சில தவறான முடிவுகள் ஆகியவை கேகேஆருக்கு இறுதிப்போட்டியில் பெரும் பாதிப்பாக அமையலாம். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

டெல்லிக்கு எதிரான போட்டியிலேயே அதை பார்த்தோம். இறுதிப்போட்டியில் இவை தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணி அபாரமாக ஆடிவருகிறது. தோனி அருமையாக கேப்டன்சி செய்துவருகிறார். ஒரு அணியாக சிஎஸ்கே வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். எனவே இந்த சீசனில் சிஎஸ்கே அணி மீண்டுமொருமுறை கோப்பையை தூக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை