ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சஹார் விலகல் - தகவல்

Updated: Thu, Feb 24 2022 19:03 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் தீபக் சஹார். இவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. 

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் போது தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டத்து. இதன் காரணமாக அவர் போட்டியின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். 

மேலும் அவரது காயம் குணமடைய ஆறு வாரங்களாவது தேவைப்படும் என மருத்துவர்கள் கூறியதால் இலங்கையுடனான தொடரிலிருந்தும் தீபக் சஹார் விலகினார்.

இந்நிலையில் அவரது காயம் மேலும் தீவிரமடையும் பட்சத்தைல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து தீபக் சஹார் முற்றிலுமாக விலகுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருவேளை தீபக் சஹார் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் இழப்பாக அமையும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை