வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படிமுதலில் பேட் செய்த இந்திய அணி தினேஷ் கார்த்திக் மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடியால் 190 ரன்களை குவித்தது.

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் கலக்கினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தக்கு எதிரான டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக், 11, 12 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இது தினேஷ் கார்த்திக்கிற்கு கொஞ்சம் சரிவாக காணப்பட்டது. இதனால் டி20 உலக கோப்பையில் இடம்பெற வேண்டும் என்றால் கார்த்திக், இந்த தொடரில் சாதிக்க வேண்டும் என்று விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி தடுமாறிய போது களமிறங்கிய கார்த்திக், தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.

இதன் மூலம் 19 பந்துகளில் கார்த்திக், 41 ரன்களை விளாசி இருக்கிறார். இதில் 4 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். கார்த்திக்கின் இந்த ஆட்டத்தால், 140 ரன்கள் அடிக்க வேண்டிய இந்திய அணி அணி 190 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தின் மூலம் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் பினிஷிங் ரோலுக்கு கார்த்திக் உறுதி செய்துவிட்டார்.

இந்த நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனியே செய்யாத சாதனை ஒன்றை கார்த்திக் செய்துள்ளார். அதாவது பேட்டிங் வரிசையில் 5 அல்லது அதற்கு கீழ் இறங்கி 5 முறை 200 ஸ்ட்ரைக் ரேட்க்கு மேல் 25 ரன்களுக்கு அதிகமாக அடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கார்த்திக் படைத்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News