பார்சிலோனாவில் கிரிக்கெட்; ஆச்சரியமளிக்கும் மக்கள் எதிர்பார்ப்பு!

Updated: Fri, May 28 2021 14:52 IST
Image Source: Google

சர்வதேச கால்பந்து விளையாட்டில் அடிக்கடி உபயோகப்படும் பெயர் ஸ்பெயின் கால்பந்து அணியான பார்சிலோனா. உலக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான பார்சிலோனா அணிக்கு உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். 

இந்நிலையில் பார்சிலோனா அரசு மக்களின் மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவானது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும். 

ஏனெனில் இந்த கருத்துக்கணிப்பில் கால்பந்துக்கு அடுத்த படியாக மக்கள் அதிகம் விரும்பும் விளையாட்டாக கிரிக்கெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்சிலோனாவில் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் படியும் அதிகளவு மக்கள் வாக்களித்துள்ளனர். 

இதற்கு முக்கிய காரணமாக சில இளம்பெண்கள் சேர்ந்து நடத்திய கிரிக்கெட் குறித்து விழிப்புணர்வே காரணம் என்றும் கூறப்படுகிறது. உலகில் கால்பந்து வல்லமை மிக்க நாடுகளில் பார்சிலோனா முக்கிய இடம் வகிக்கும் நிலையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டிற்கு இங்கு ஆதரவு அதிகரித்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை