நியூசிலாந்து வீரர்கள் ஆக்கோரஷமாக பந்துவீசிய போதும் தனி ஆளாக நின்று ஜானி பேர்ஸ்டோவ் சதம் விளாசி இருக்கிறார். இங்கிலாந்து அணி தடுமாறிய போது எல்லாம் கேப்டன் போல அணியை கரை சேர்த்துள்ளார்.

Advertisement

முதல் இன்னிங்சில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. நியூசிலாந்து அணியின் டிரெண்ட் பவுல்ட், தனது அனல் பறக்கும் பந்துவீச்சை வீச, இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதனை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 

Advertisement

இதனையடுத்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டை இழந்தது. இதில் 12ஆவது ஓவரில் வாக்னர் வீசிய போது 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின் தடுமாறிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் தனி ஆளாக நின்று அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். மளமளவென பவுண்டரிகளை  அடிக்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. பேர்ஸ்டோவுக்கு இங்கிலாந்து பவுலர் ஓவர்டன் நன்கு கம்பெனி கொடுக்க, இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். 

இதன்மூலம் 92 பந்துகளில் சதம் விளாசிய பேர்ஸ்டோவ், ஆட்டநேர முடிவில் ஆட்டமிழக்காமல் 130 ரன்கள் எடுத்தார். இதில் 21 பவுண்டரிகள் அடங்கும். 55 ரன்களுக்கு 6 விக்கெட் என்ற ஸ்கோரில் தடுமாறிய இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவின் அதிரடியால் 264 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளது. 

இது நியூசிலாந்து அணியின் ஸ்கோரை விட 65 ரன்களே குறைவாகும். பேர்ஸ்டோவ் 2022ஆம் ஆண்டு மட்டும் 4 சதம் விளாசியுள்ளார். நான்கு சதத்தையும் , இங்கிலாந்து அணி தடுமாறிய போது தான்  விளாசியுள்ளார்.

Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்த போதும், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்த போதும், நியூசிலாந்துக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்த போதும், தற்போது 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாறிய போதும், பேர்ஸ்டோவ் சதம் விளாசி அணியை காப்பாற்றி இருக்கிறார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News