இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பர்மிங்ஹாமில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்திருந்தார். 

Advertisement

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஸ்மான் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - கேப்டன் பாபர் அசாம் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். 

Advertisement

இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின் 56 ரன்கள் எடுத்திருந்த இமாம் உல் ஹக் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 14ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 

அவருடன் இணைந்த முகமது ரிஸ்வானும் தனது பங்கிற்கு அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர் அபாரமாக விளையாடி வந்த பாபர் அசாம் 150 ரன்களை கடந்தார். 

இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக பாபர் அசாம் 158 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிரைடன் கார்ஸ் 5 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 3 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News