வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மிகவும் மோசமாக சரிந்திருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் மீது பிற உலக நாடுகளுக்கு ஒரு அனுதாபப் பார்வை எப்பொழுதுமே இருந்து வருகிறது. அவர்கள் தங்கள் நாட்டு அணியை வென்றாலும் கூட வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக பிற நாட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Advertisement

ஏனென்றால் அந்த அளவிற்கு ஆரம்ப காலகட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் விளையாடக்கூடிய அதிரடி முறை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் இருக்கிறது. எனவே அவர்களின் இருப்பு உலக கிரிக்கெட்டில் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவசியப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு முறை 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு டி20 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீரரான மர்லான் சாமுவேல்ஸ் மீது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சூதாட்ட புகார் வெளிவந்து இருக்கிறது. இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச அளவில் 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இருக்கிறார். 

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருந்தார். இந்தச் சமயத்தில் 2019 ஆம் ஆண்டு இவர் அபுதாபி டி10 லீக்கில் விளையாடிய பொழுது, கிரிக்கெட் சட்ட விதிகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் புகார் குறித்து இழுத்தடிப்பு செய்ததாகவும் இவர் மீது கிரிக்கெட்டில் ஊழலுக்கு எதிரான சுதந்திர தீர்ப்பாயம் தீர்ப்பளித்து இருக்கிறது.

கிரிக்கெட் ஊழல் தடுப்பு விதியில் 750 டாலருக்கு மேல் பரிசு பொருளாகவோ அல்லது வேறு வழியிலோ தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பணம் வந்தால், அது குறித்து தொடரை நடத்தும் அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் இவர் அதை நான்கு முறை மீறியதோடு, அது குறித்து விசாரணைக்கும் ஒத்துழைப்பு தர மறுத்திருக்கிறார். இந்த புகார் 2021 ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்து, தற்பொழுது இவர் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

மேலும் இவர் இப்படியான புகாரிலேயே 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் விலக்கி வைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மிகவும் சர்ச்சைக்குரிய முறையில் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மற்றும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இருவரிடமும் இவருக்கு களத்தில் மற்றும் வெளியில் தகராறுகள் இருந்தது. தற்பொழுது சூதாட்டப் புகாரில் குற்றவாளி என தீர்ப்பும் வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News