இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணியின் 22 வயதான வீரர் ஹாரி டெக்டார் தனது பேட்டிங் மூலம் பட்டையை கிளப்பினார்.

Advertisement

மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அப்போது முதலில் செய்த அயர்லாந்து அணி இந்திய அணியின் ஸ்விங் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

Advertisement

ஒரு கட்டத்தில் 22 ரன்களுக்கு 3 விக்கெட் என அயர்லாந்து அணி தடுமாற, போட்டியை காண வந்த ரசிகர்கள் கடுப்பாகினர். அப்போது தான் களத்தில் எண்டரி கொடுத்தார் 22 வயதான ஹாரி டெக்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் இந்திய பந்துவீச்சுக்கு கவுண்டர் அட்டாக் ஆடினார். 

குறிப்பாக, உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் மிட் விக்கெட் பகுதியில் சிக்சர், புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் கவர் பகுதியில் சிக்சர் என்று கெத்து காட்டினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த டெக்டார், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். 

இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதனால் அயர்லாந்து அணி ஓவரில் 108 ரன்கள் விளாசியது. இந்த நிலையில், போட்டி முடிந்ததும் டெக்டாரை அழைத்து தனது பேட்டை ஹர்திக் பாண்டியா பரிசாக வழங்கி கௌரவித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, “பேட்டிங் ஆடும் போது அவர் சில சூப்பர் ஷாட்களை ஆடி ரன் குவித்தார். அவருக்கு வயது 22 தான் ஆகிறது. அதனால் அவருக்கு ஏன் பேட்டை வழங்கினேன். அவர் இன்னும் அதிக சிக்சர் அடித்து ஐபிஎல் ஓப்பந்தத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

Advertisement

அவருக்கு என் வாழ்த்துக்கள்.. ஹாரிஸ் டெக்டாரை சரியாக பார்த்து கொள்ளுங்கள். அவரை சரியாக வழிநடத்துங்கள். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை பாடத்துக்கும் தான் சொல்கிறேன். இது அவருக்கு சரியாக நடந்தால் அனைத்து கிரிக்கெட் லீக்களிலும் ஒரு ரவுண்ட் கலக்குவார்” என்று தெரிவித்தார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News