இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக விலங்கி வந்த ஹர்திக் பாண்ட்யா தற்போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காயத்தால், தற்போது வரை அவர் முழு உடற்தகுதியுடன் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுத்தி வருகிறது.

Advertisement

கடந்த 2019ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதி பெறவில்லை என்றாலும், மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணியில் நம்பி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர் இரண்டிலுமே பேட்டிங், பவுலிங் என சொதப்பி வருகிறார். குறிப்பாக அவரி சரிவர பந்துவீசாமல் இருப்பது தான் தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது.

Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்த பாண்டியாவுக்கு, டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் மொத்தமாக 4 ஓவர்களை மட்டுமே வீசிய அவர், 40 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டை கூட எடுத்துக்கொடுக்கவில்லை. 

இதன் விளைவாக தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பாண்டியா ஒதுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐபிஎல்-ல் கலக்கிய வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு திரும்புவது சந்தேகம் தான் என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவுடனான தொடருக்காக ஹர்திக் பாண்டியாவுக்கு அவசர நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.  

இந்த தொடர் தென் ஆப்பிரிக்காவில்  வரும் டிசம்பர் 17 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான இந்திய அணியில் தான் ஹர்திக் பாண்ட்யா இணைக்கப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Advertisement

இதுகுறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹர்திக் பாண்டியா வெகு விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கப்படுவார். அங்கு அவர் தனது முழு உடற்தகுதியையும் நிரூபித்து காண்பித்த பின்னர் தான் தென்ஆப்பிரிக்க அணியுடனான போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்படுவார் எனக்கூறியுள்ளார். 

தற்போதைய சூழலை வைத்து பார்த்தால், ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராவது மிக கடினம். அவருக்கு சிறிது காலம் அவகாசம் தேவை. மற்றபடி அவரின் உடற்தகுதி வைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு களமிறக்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: T20 World Cup 2021

Advertisement

நியூசிலாந்து தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர், தன்னை நிரூபித்து வருகிறார். பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் ரோஹித் சர்மா அவரை பயன்படுத்த தொடங்கிவிட்டார். நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் 3 ஓவர்களை வீசிய வெங்கடேஷ் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News