ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளான இவ்விரு அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் ஆசாம், ஷாஹீன் அஃப்ரிடி போன்ற தரமான வீரர்கள் இருப்பதால் அனல் பறக்கப் போகும் இப்போட்டியை பார்ப்பதற்கு அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

முன்னதாக இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவதால் நம்பர் 4வது பேட்ஸ்மேன் பிரச்சனை தீர்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் கேஎல் ராகுல் பயிற்சிகளின் போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்ததால் இந்த ஆசிய கோப்பையின் முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement

ஏனெனில் தொடக்க வீரராக விளையாடி தடுமாறிய அவர் ரிஷப் பந்த்திற்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்று கடந்த ஜனவரி, பிப்ரவரியில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

அதனால் ரிஷப் பந்திற்கு பதிலாக விக்கெட் கீப்பராக உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு ஆள் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தற்போது காயத்தை சந்தித்துள்ள அவருக்கு பதிலாக இஷான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் முதல் சர்வதேசம் வரை தம்முடைய கேரியரில் பெரும்பாலும் தொடக்க வீரராக விளையாடிய அவர் கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார்.

எனவே ரோஹித் சர்மா, கில், விராட், ஸ்ரேயாஸ் ஆகியோர் டாப் 4 இடங்களில் கண்டிப்பாக விளையாடுவார்கள் என்ற நிலைமையில் திடீரென இந்த தொடரில் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடி அவரால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் இஷான் கிசான் 4ஆவது இடத்தில் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டு தொடர்நாயகன் விருது வென்றதை மறக்காதீர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,  “நீங்கள் தொடர்ச்சியாக சோதனை செய்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். தற்சமயத்தில் வலுவான மற்றும் சமநிலையான அணியாக கருதப்படும் இங்கிலாந்து கூட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகம் சோதனைகளை செய்வதில்லை. ஏனெனில் அவர்களுடைய டாப் 3 வீரர்கள் மாறாமல் விளையாடுகின்றனர்.

Advertisement

ஒருவேளை சோதனைகள் செய்தாலும் அதை 30 ஓவர்களுக்கு பின் செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் துபாயில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இஷான் கிசான் தொடர்நாயகன் விருது வென்றதை மறக்காதீர்கள். அந்தத் தொடரில் அவர் தொடக்க வீரராக விளையாடவில்லை. மாறாக 4வது இடத்தில் தான் விளையாடினார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News