இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்!

Updated: Thu, Aug 24 2023 16:11 IST
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் பலவீனமாகவுள்ளது - ரஷித் லதீஃப்! (Image Source: Google)

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை எனும் பெரிய தொடர் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீஃப். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் பேட்டர்கள் பவர் ப்ளேயில் கொஞ்சம் ஸ்லோவாக ஆடுகின்றனர். முடிவு ஓவர்களுக்கான பவர் ஹிட்டர்களும் இல்லை. ஆனால், பவர் ப்ளே பந்து வீச்சில் நாம் அபாரமாக திகழ்கிறோம். பாகிஸ்தான் பவுலிங்கில் பிரச்சினை என்னவென்றால் 11ஆவது ஓவர் முதல் 40ஆவது ஓவர் வரை விக்கெட் எடுக்க ஆளில்லை. ஷதாப் கான் ஆகட்டும், மொகமத் நவாஸ் ஆகட்டும் விக்கெட் எடுக்க பாடுபடுகின்றனர்.

இங்குதான் ரோஹித் சர்மா, விராட் கோலி நின்றுவிட்டால் பெரிய பிரச்சனை காத்திருக்கிறது பாகிஸ்தானுக்கு. ஏனெனில், இருவருமே பெரிய ஸ்கோர்களை எடுப்பவர்கள். நம் டாப் ஆர்டர் வீரர்களை விட கோலி, ரோகித் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவார்கள். இது இந்தியாவுக்குச் சாதகம். ஆனால், பாகிஸ்தானின் சாதகம் அவர்களது பந்து வீச்சு. வேகப்பந்து வீச்சில் பெரிய பலம் உள்ளது.

ஆனால், பந்துகள் திரும்பும் ஸ்லோ பிட்ச்களில் வேகப்பந்து வீச்சின் முனைப்பு அழிக்கப்பட்டு விடும். பேட்டிங்கில் இமாம் உல் ஹக், பாபர் அஸம், ரிஸ்வான், பகர் ஜமான் ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். பிறகு ஷாஹின் அஃப்ரிடி, சதாப் கான், முகமது நவாஸ் ஆட்டோமேட்டிக்காக தேர்வு ஆவார்கள். ஆனால், இந்தியா மற்ற அணிகளை ஒப்பிடுகையில் மிடில் ஆர்டர் வரிசையில் திணறி வருகிறது. அந்த இடத்தில்தான் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் தொடரை வெல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை