ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!

Updated: Fri, May 21 2021 22:29 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது. அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என 6 போட்டிகளில் விளையாடுகிறது. 

இந்த நிலையில் அதே சமயத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடர் ஜூலை 13 முதல் 27ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விராட் கோலி, ரோகித் சர்மா, ரி‌ஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி இலங்கையில் விளையாட உள்ளது. தவான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் இந்த செயலை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக் பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியா செய்யாததை இந்தியா சாதித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், வலுவான ஒரு அணி இருக்கும் போது அதே பலத்துடன் கூடிய மற்றொரு அணியை உருவாக்கும் யோசனையை இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னெடுத்துள்ளது சுவாரஸ்யமானது. இந்தியா இன்று செய்து வரும் முயற்சியை ஆஸ்திரேலியா 1990 - 2000ஆம் ஆண்டில் செய்திருந்தது. ஆனால் அவர்களால் அதில் வெற்றி பெற முடியவில்லை.

ஆனால் இந்தியா அதனை வெற்றிகரமாக கையாளும் என தெரிகிறது. ஒரே நேரத்தில் இரண்டு மாறுபட்ட சர்வதேச தொடரில் இந்தியா விளையாடுகிறது. இரண்டுமே தேசிய அணிகளாகும். ஆஸ்திரேலியாவால் செய்யமுடியாததை இந்தியா சாதித்துள்ளது என பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை