IND vs SL: குர்னால் பாண்டியாவிற்கு கரோனா; டி20 போட்டி ஒத்திவைப்பு!

Updated: Tue, Jul 27 2021 18:34 IST
India-Sri Lanka 2nd T20I Postponed After Krunal Pandya Tests Positive (Image Source: Google)

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட  டி 20 தொடரில்  இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது. இதற்கிடையில் இந்திய அணி ஆல் ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள குர்னால் பாண்டியா மருத்துவ கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை