நாங்கள் சிறப்பாக செயல்படவேண்டியது அவசியம் - சஞ்சு சாம்சன்

Updated: Fri, Oct 08 2021 12:27 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 54ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்தது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியால் 85 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில், இந்த தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த முழு சீசனையும் பார்த்தால், நாங்கள் பல சவால்களை சந்தித்திருக்கிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் குணத்தைக் காட்டினோம், சிறுவர்களைப் பற்றி பெருமைப்படுகிறோம். நாங்கள் சில நெருக்கமான ஆட்டங்களில் வென்று சில எளிதான ஆட்டங்களை இழந்தோம். இந்த தொடரில் அதிக போட்டிகாளை வெல்ல நாம் ஒரு சிறந்த தரமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றி, 9 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 7ஆவது இடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை