ஐபிஎல் குவாலிஃபையர் போட்டிக்கு சிக்கல்!

Updated: Sun, May 22 2022 15:12 IST
Image Source: Google

கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்ட சூழலில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்தையும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. லக்னோ அணி 18 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், 16 புள்ளிகளுடன் ஆர்சிபி 4ஆவது இடத்தையும் உறுதி செய்துவிட்டன. இந்த அணிகளுக்கான ப்ளே ஆஃப் சுற்று வரும் மே 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் முதல் குவாலிஃபையர் போட்டி வரும் மே 24 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. இதற்கு காரணம் புயல் தான்.

சமீபத்தில் உருவான புயலால் கொல்கத்தாவில் கடும் மழை பொழிந்தது. இதனால் ஈடன் கார்டன் மைதானம் பெரியளவில் சேதாரம் அடைந்ததுள்ளது. போட்டி நாளன்றும் இதே போன்று கடும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் வெளிச்சமின்மையாக இருக்கும் என தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மழைக்காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று மாலை மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அனைத்து சரிசெய்யப்படுவிடும் என்பது போன்று கூறி சென்றுள்ளார். ஆனால் போட்டி சரியாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வருகிறது. அட்டவணை கூட மாற்றப்படலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை