ஐபிஎல் 2022: அகமதாபாத் அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!

Updated: Mon, Feb 07 2022 18:32 IST
IPL 2022: Ahmedabad franchise reveal official name as Ahmedabad Titans (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைந்துள்ளன. இந்த சீசனில் 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது. 

அதன்படி லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் ஏலத்திற்கு முன்பாக தலா 3 வீரர்களை  எடுத்தது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ள இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். இந்த ஏலத்தில் கலந்துகொள்ள 1,214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதில் 590 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக களமிறங்கும் லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்தது. அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயர் சூட்டியதுடன் லோகோவையும் வெளியிட்டது.

அதேபோல் ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்த அகமதாபாத் அணி, அணியின் பெயரை அறிவிக்காமல் இருந்துவந்தது.

இந்நிலையில், அந்த அணி அகமதாபாத் டைட்டன்ஸ் என தங்களுக்கு அணிக்கு பெயர் சூட்டியிருக்கிறது. அகமதாபாத் டைட்டன்ஸ் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை