ஐபிஎல் 14ஆவது சீசனில் கெத்தாக விளையாடி கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 15ஆவது சீசனில் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

Advertisement

இந்த பின்னடைவுக்கு முதன்மை காரணம், கேப்டன்ஸி மாற்றம்தான். முதல் லீக் போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தோனி திடீரென்று கேப்டன் பதவியிலிருந்து விலகி, ஜடேஜாவை அந்த இடத்திற்கு கொண்டு வந்தார்.

Advertisement

இதுதவிர தீபக் சஹார் இல்லாதது, தொடக்க வீரர் ருதுராஜ் சொதப்பல், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவது போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. இந்நிலையில், இந்த பிரச்சினையை சரிசெய்ய சிஎஸ்கே நிர்வாகம், தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ருதுராஜுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மனநல ஆலோசகரிடம் பேசவைத்து, தற்போது பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். ருதுராஜும் தற்போது பயிற்சியில் காட்டடி அடித்து வருகிறார். 

தீபக் சஹார் இன்னும் இரண்டு போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுவதால், முகேஷ் சௌத்ரிக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சௌத்ரிக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் பலாஜி தனிக்கவனத்துடன் பயிற்சியளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பனியின் தாக்கத்தின்போது பந்துவீச ஏதுவாக ஈரம் நிறைந்த பந்தை கொடுத்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியில் ஸ்லோ பால் வீசுவது, ஒயிட் யார்க்கர்களை வீசுவது போன்றவைகள் குறித்து நுணுக்கமாக கற்றுக்கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் சௌத்ரியும் எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் சிறப்பாக பந்துவீசி பயிற்சி மேற்கொண்டாராம். இதனைத் தொடர்ந்து இடது கை பேட்ஸ்மேன் மொயின் அலிக்கு எதிராக பந்துவீச வைத்திருக்கிறார்கள். டுவைன் பிரிடோரியஸும்தான் பந்துவீசியிருக்கிறார். அப்போது, மொயின் அலியை தடுமாற வைக்கும் அளவுக்கு ஒயிட் யார்க்கர், ஸ்லோ பால்களை சிறப்பாக வீசியிருக்கிறார். 

Advertisement

இதனால், சிஎஸ்கேவுக்கு பவர் பிளே டெத் ஓவர்கள் பிரச்சினை ஓரளவுக்கு ஓய்ந்துவிட்டதாக கருதப்படுகிறது. இவர்களுடன் சேர்த்து, ஃபார்மில் இருக்கும் டுவைன் பிராவோவும் இணைந்து, அடுத்த போட்டியில் சன் ரைசர்ஸை திணறடிக்க அதிக வாய்ப்புள்ளது.

மேலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பேட்டிங் கோச் மைக்கேல் ஹஸ்ஸி இரவு 12 மணி வரை தொடர்ந்து பயிற்சியும், ஆலோசனையும் வழங்கி வருகிறாராம். இதனால், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜின் ஆட்டம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News