ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  4 ரன்னில் ஆட்டமிழந்து மற்றுமொரு முறை ஏமாற்றமளித்தார். நன்றாக ஆடிய தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

Advertisement

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ஜோஸ் பட்லருக்கு சரியாக ஷாட்டுகள் கனெக்ட் ஆகாமல் திணறினார். ஆகாஷ் தீப்பின் பவுலிங்கில் ஒரே ஓவரில் 2 கேட்ச்களை பட்லருக்கு தவறவிட்டனர் ஆர்சிபி வீரர்கள். பட்லருக்கு ஷாட் கனெக்ட் ஆகாததால் அணியின் ஸ்கோர் உயரவேயில்லை.

18 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ராஜஸ்தான் அணி. ஆனால் கடைசி 2 ஓவரில் பட்லர் அடி வெளுத்துவிட்டார். 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்த பட்லர், கடைசி ஓவரிலும் 2சிக்ஸர்கள் அடித்தார். பட்லர் 47 பந்தில் 70 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பட்லரின் அதிரடியால் கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 42 ரன்கள் கிடைத்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - அனுஜ் ராவத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

பின் டூ பிளெசிஸ் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 26 ரன்களுக்கு அனுஜ் ராவத்தும் விக்கெட்டை இழந்தார். பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 5 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

Advertisement

அதற்கடுத்த பந்திலேயே டேவிட் வில்லி கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ரூதர்ஃபோர்டும் 5 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஷபாஸ் அஹ்மத் - தினேஷ் கார்த்திக் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் ஆர்சிபியின் வெற்றியும் ஏறத்தாழ உறுதியானது. 

பின் 45 ரன்களில் ஷபாஸ் அஹ்மத் போல்டாக போட்டியில் அனல் பறந்தது. ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்தில் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார்.

Advertisement

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கால் இருந்த தினேஷ் கார்த்தி 44 ரன்களைச் சேர்த்தார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News